வலைப்பூ
சாலச்சுகம் 9
ஏன் இந்த மேஸ்திரிகள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த சமையல்காரர்கள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த நடிகர்கள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த அரசியல்வாதிகள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த நீதிபதிகள் இப்படி இருக்கிறார்கள் ஏன் இந்த காவலர்கள் இப்படி இருக்கிறார்கள்… Read More »சாலச்சுகம் 9
சாலச்சுகம் 4
தெ வி ட் டா த தெ ள் எனக்கு வேண்டியதெல்லாம் தலைமறைவுக்கென யாருமறியாத ஓரிடம் மனித நுழைதல் நடைபெற்றிராத ஆழ்வனம் ஆங்கோர் கனமரம் கிளைகளூடாக ஓர் குடில் உள்ளொரு படுக்கை அதில் முடங்குகையில் மேலே போர்த்தவொரு கம்பளி போலவொரு மனசு சாலச்சுகம்
சாலச்சுகம் 3
மோனத்தவம் 1 மேதமையோவென்று நினைத்திருக்கக் கூடும் இத்தெய்வம் முன்னின்ற தேவகணம் வேண்டிக் கொள்வதற்கு ஏதும் தோன்றாத பேதமை என் மோனம். 2 விபத்தில் வெட்டுண்ட கரம் இன்னுமிருக்கிறாற் போலவே அவ்வப்போது பாவனை செய்யும் பழைய காலத்து ஞாபகக் கூச்சம் 3 கிணற்றில்… Read More »சாலச்சுகம் 3
சாலச்சுகம் 2
___________________________________________________________________ 1. நான் கேட்கவேயில்லை ஆனாலும் இரண்டு மனம் வாய்த்திருக்கிறது. ஒன்று நினைத்து வாடுகிறது மற்றது அதற்காக நொந்து கொள்கிறது. 2 எந்தப் பாவியோ நான் அருந்துவதற்காக வைத்திருந்த விஷத்தில் தண்ணீரைக் கலந்துவிட்டிருக்கிறான் 3 நீங்கள் அடைந்துவிட்டதாய் இறுமாந்து கொள்கிற அதே… Read More »சாலச்சுகம் 2
சாலச்சுகம் 1
அந்தக் குழந்தைக்கு முத்தமிடத் தெரியவில்லை. நீட்டிய கன்னங்களில் வெறுமனே தன் வாயைத் தீற்றுகிறது. இவ்வுலகின் கச்சித முத்தங்களுக்கான பேரேட்டில் அந்தத் தீற்றல் இடம்பெறுமாவெனத் தெரியாது. என்றபோதும் கொடுக்கத் தெரியாத முத்தம் கால்தடம் பாவாத பெருவனம் போல அது சாலச்சுகம்.